உள்ளூர் செய்திகள்

திண்டிவனத்தில் கெட்டுப்போன உணவுகளை விற்ற ஓட்டலுக்கு அபராதம்

Published On 2023-08-31 07:40 GMT   |   Update On 2023-08-31 07:40 GMT
  • அசைவ ஓட்டல் ஒன்றில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டனர்.
  • உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006 சட்டப்பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்கப் பட்டது.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் எம்.ஆர்.எஸ். கேட் அருகே உள்ள அசைவ ஓட்டல் ஒன்றில், இன்று சிலர் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட னர். அதில், பழைய கோழி இறைச்சி இருந்ததை கண்டு, உணவு பாதுகாப்புதுறை அதி காரிகளுக்கு தகவல் தெரிவித்த னர். தகவலறிந்த, உணவு பாது காப்பு துறை அதிகாரிகள், திண்டிவனம் எம்.ஆர்.எஸ். கேட் அருகே உள்ள அசைவ ஓட்டல்களில் திடீர் ஆய்வு செய்தனர். உணவு பாதுகாப்பு மாவட்ட நிய மன அலுவலர் டாக்டர். சுகந்ததன் தலைமை யில் ஆய்வு செய்தனர்.

ஆய்வில், 10 கிலோ நிற மேற்றப்பட்ட கோழி இறைச்சி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு, அதை பறி முதல் செய்து அழித்தனர். மேலும், 15-க்கும் மேற்பட்ட கடைகளில் சோத னை நடத்தினார். சோதனை யில் பரோட்டா டிசைன் 32 கிலோ மற்றும் கார்பெண்ட் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழ தார்கள் 150 கிலோ மற்றும் ப்ரூட் மிக்ஸர் ஜூஸ் 90 லிட்டர் போன்றவை கள் பறி முதல் செய்யப்பட்டு அழிக்கப் பட்டது. உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006 சட்டப்பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்கப் பட்டது. மேலும் 4 கடைகளுக்கு ரூ.15,000 அபராதம் விதிக்கப் பட்டது. இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடை பெறும் என உணவு பாது காப்புத்துறை அதிகாரி கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News