உள்ளூர் செய்திகள்

4 ஆண்டு முன்பு காணாமல் போன கூலித் தொழிலாளி மகள் மீட்பு

Published On 2023-10-20 07:28 GMT   |   Update On 2023-10-20 07:28 GMT
  • சினேகா கடந்த 2020 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி காணாமல் போனார்.
  • சினேகா,அசோக் என்ற வாலிபரைதிருமணம் செய்து தம்பதி சமேதராக குழந்தையுடன் இருப்பதை கண்டு பிடித்தனர்

கடலூர்:

பண்ருட்டி அடுத்த நடுகாட்டுபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தன்.கூலித் ெதாழிலாளி. இவரது மகள் சினேகா. இவர் கடந்த 2020 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி காணாமல் போனார். பல இடங்களில் தேடி எங்கும் கிடை காததால் காடாம்புலியூர் போலீசில் அவரது பெற்றோர்கள் புகார் கொடு த்தனர்.காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

4ஆண்டு க்கு முன்பு காணாமல் போன இளம் பெண் சினேகாவை, இன்ஸ்பெக்டர்ராஜதாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் குமார் ஆகியோர் பல்வேறு கோணங்களில் நடத்தி தேடி வந்தனர். இவர்களது தீவிர முயற்சியால் 4 ஆண்டுகளுக்கு பிறகுபழனி அருகே ஒரு கிராமத்தில்இளம் பெண் சினேகா,அசோக் என்ற வாலிபரைதிருமணம் செய்து தம்பதி சமேதராக குழந்தையுடன் இருப்பதை கண்டு பிடித்தனர். இவர்களை காடாம்புலியூர்போலீஸ் நிலையத்திற்குஅழைத்துவரஏற்பாடுசெய்துள்ளனர். 

Tags:    

Similar News