உள்ளூர் செய்திகள்

சீர்காழியில் வலையில் சிக்கிய பாம்பு மீட்பு

Published On 2023-02-23 15:23 IST   |   Update On 2023-02-23 15:23:00 IST
  • 8அடி நீளம்கொண்ட பாம்பு சிக்கிக்கொண்டு தவித்தது.
  • அரைமணிநேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்டு வனபகுதியில் கொண்டு சென்று விட்டார்.

சீர்காழி:

சீர்காழி அருகே செம்மங்குடியில் அரவிந்த் என்பவரின் வீட்டு பின்புறம் அமைத்திருந்த வலையில் 8அடி நீளம்கொண்ட மஞ்சள் சாறை பாம்பு சிக்கிக்கொண்டு தவித்தது.இதனால் அப்பகுதிக்கு செல்லவே அப்பகுதியின் அச்சம் அடைந்து புளிச்சகாடு பகுதியை சேர்ந்த பாம்புபிடி வீரர் தினேஷிடம் தகவல் அளித்தனர்.

அங்கு சென்ற தினேஷ் வலையில் சிக்கியிருந்த 8அடிநீள பாம்பினை அரைமணிநேரம் போராட்டத்திற்கு பிறகு லாவகமாக மீட்டு ஆள்நடமாட்டம் இல்லாத வனபகுதியில் கொண்டு சென்று விட்டார்.இளைஞருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News