உள்ளூர் செய்திகள்

மூங்கில்துறைப்பட்டில்கழிவு நீர் தொட்டியை மூட கோரிக்கை

Published On 2023-02-18 09:30 GMT   |   Update On 2023-02-18 10:12 GMT
  • குடியிருப்பு பகுதியில் நீண்ட நாட்களாக மூடப்படாத கழிவு நீர் தொட்டி உள்ளது.
  • இந்த தொட்டி நான்கு அடி ஆழம் உள்ளதால் குழந்தைகள் தவறி விழந்தால் உயிரிழப்பு ஏற்படும் சூழல் உள்ளது,

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப்பட்டு போலீஸ் நிலையம் அருகே உள்ள தேவி நகர் குடியிருப்பு பகுதியில் நீண்ட நாட்களாக மூடப்படாத கழிவு நீர் தொட்டி உள்ளது.

இதன் மூலமாக அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்படும் அவலம் உள்ளது. மேலும் இந்த தொட்டி நான்கு அடி ஆழம் உள்ளதால் குழந்தைகள் தவறி விழந்தால் உயிரிழப்பு ஏற்படும் சூழல் உள்ளதால், அக் கழிவு நீர் தொட்டியை கான்கிரீட் பலகையால் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக மூங்கில்துறைப்பட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தொகுதி செயலாளர் சிராஜ்தீன் கோரிக்கை வைத்துள்ளார்.

Tags:    

Similar News