உள்ளூர் செய்திகள்

சாய்ந்த மின்மாற்றியை பணியாளர்கள் சீரமைத்த காட்சி.

மணலியில் சாய்ந்த மின்மாற்றி சீரமைப்பு

Published On 2022-07-09 10:01 GMT   |   Update On 2022-07-09 10:01 GMT
  • பருத்திச்சேரியில் உள்ள மின்மாற்றியானது அடித்தளம் பழுதடைந்து அருகில் உள்ள குளத்தில் சாயும் அபாய நிலையில் இருந்தது.
  • அசம்பாவித சம்பவம் நடைபெறும் முன்னர் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி மணலி ஊராட்சி- பருத்திச்சேரியில் மின் மாற்றியானது அடித்தளம் பழுதடைந்து அருகில் உள்ள குளத்தில் சாயும் அபாய நிலையில் இருந்தது. இதனால் அந்த வழியை கடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்றனர். பெரும் அசம்பாவித சம்பவம் நடைபெறும் முன்னர் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பான செய்தி மாலைமலர் நாளிதழில் வெளியானது. இதையடுத்து திருத்துறைப்பூண்டி மின்சார வாரிய பணியாளர்கள் சாய்ந்த மின்மாற்றியை சீரமைத்தனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மாலைமலர் நாளிதழுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News