உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட காட்சி.

சூரமங்கலத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Published On 2022-10-17 09:54 GMT   |   Update On 2022-10-17 09:54 GMT
  • சூரமங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
  • இதையொட்டி கோவில் திருப்பணிகள் நடைபெறுகிறது.

சேலம்:

சேலம் சூரமங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி கோவில் திருப்பணிகள் நடைபெறுகிறது, இந்த கோவிலின் அருகே சில கடைகள் கோவில் கட்டுவதற்கு இடையூறாக இருந்து வந்தது.

இதனையடுத்து கோவில் நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடைக்காரர்களிடம் வலியுறுத்தியும் கடைகளை அகற்றவில்லை. அதன் பிறகு நிர்வாகத்தினர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் ஆக்கிரமிப்புகளை அகற்றி தர கோரி புகார் அளித்தனர்.அதன் பேரில் இன்று காலை போலீஸ் பாதுகாப்புடன் பால் பூத் உள்பட ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகள் அகற்றப்பட்டன.

Tags:    

Similar News