உள்ளூர் செய்திகள்

பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Published On 2022-10-11 08:15 GMT   |   Update On 2022-10-11 08:15 GMT
  • சங்கராபுரம் பஸ் நிலையத்தில் சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்து பயன்படுத்தி வந்தனர்.
  • போலீசார் பஸ் நிலையத்திற்கு சென்று ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றினர்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பஸ் நிலையத்தில் சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்து பயன்படுத்தி வந்தனர். இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் செயல் அலுவலர் சம்பத்குமார் தலைமையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் பஸ் நிலையத்திற்கு சென்று ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றினர். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டி மற்றும் வாகனங்களையும் அப்புறப்படுத்தினர்.

Tags:    

Similar News