உள்ளூர் செய்திகள்

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம்

Published On 2023-05-29 09:41 GMT   |   Update On 2023-05-29 09:41 GMT
  • நேற்றிரவு திடீரென இவரது வீடு தீப்பிடித்து எரிந்தது.
  • பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் மற்றும் தார்பாய் வழங்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி பெரியநாயகிபுரம் தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன்.

இவர் குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்றிரவு திடீரென இவரது வீடு தீப்பிடித்து எரிந்தது.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் போராடி தீயை அணைத்தனர்.

ஆனால் அதற்குள் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது.

இதுகுறித்து, தகவலறிந்த நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் மற்றும் தார்பாய் வழங்கி ஆறுதல் கூறினார்.

மேலும், அரசால் வழங்கப்படும் உதவித்தொகை, வேஷ்டி, சேலை, அரிசி ஆகியவற்றையும் வழங்கினார்.

இதேபோல், தாசில்தார் காரல்மார்க்ஸ், துணை தாசில்தார் ஜோதிபாசு, வி.ஏ.ஒ. முருகானந்தம், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், கவுன்சிலர் ரமேஷ்குமார் ஆகியோரும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

Tags:    

Similar News