உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள்

Published On 2022-08-07 09:16 GMT   |   Update On 2022-08-07 09:16 GMT
  • ஊட்டியில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.
  • மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊட்டி

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளும், மரங்கள் விழுந்தும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊட்டி லவ்டேல் அருகே கெரடா சாலையில் ஒரு வீட்டின் மீது மரம் விழுந்துள்ளது. ஊட்டி காந்தல் பகுதியில் வீடுகள் சேதம் அடைந்தது.

இந்த பகுதிகளை நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் மற்றும் நிதி உதவி வழங்கினார்.

பின்னர் லவ்டேல் ெரயில்வே பாலம், எல்கில் முருகன் கோவில் செல்லும் வழி, ராகவேந்திரா கோவில் முன்புறம் ஆகிய இடங்களில் மரம் விழுந்து மின்கம்பங்கள் துண்டிக்கப்பட்டு உள்ள பகுதிகளை பார்வையிட்டும், உடனே இவற்றை சரி செய்து பொதுமக்களுக்கு மின் இணைப்பு வழங்கிடவும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

அப்போது அவருடன் மாவட்ட துணை செயலாளரும், ஊட்டி நகர மன்ற துணைத் தலைவருமான ரவிக்குமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, ஊட்டி நகராட்சி தலைவர் வானீஸ்வரி, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் காந்தல் ரவி, எல்கில் ரவி, ராஜா, நகர துணை செயலாளர் ரீட்டா, மாவட்ட பிரதிநிதிகள் தம்பி இஸ்மாயில், கார்த்திக், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ், உதகை நகர மன்ற உறுப்பினர்கள் ரமேஷ், கீதா, விஷ்ணு பிரபு, ரகுபதி, கஜேந்திரன், அபுதாகீர், தியாகு உட்பட கழக நிர்வாகிகள் மஞ்சனக்கொரை ஸ்டான்லி, வெங்கடேஷ், குரூஸ், ஆட்டோ பாபு, குமார், நடராஜ் உட்பட கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

Tags:    

Similar News