உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

ஆன்லைனில் இழந்த ரூ.1.20 லட்சம் மீட்பு - சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

Published On 2023-04-18 07:40 GMT   |   Update On 2023-04-18 07:40 GMT
  • வாலிபரிடம் மர்ம நபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆன்லைன் வர்த்தகம் தொடர்பாக பேசி முதலீடு செய்யுமாறு கூறி உள்ளனர்.
  • ஆன்லைனில் இழந்த ரூ.1.20 லட்சம் பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.

திண்டுக்கல்:

நிலக்கோட்டையை சேர்ந்தவர் முருகன் (வயது35). இவரிடம் கடந்த 2022ம் ஆண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆன்லைன் வர்த்தகம் தொடர்பாக பேசி முதலீடு செய்யுமாறு கூறி உள்ளனர். அதனை நம்பி முருகன் ரூ.1.20 லட்சம் பணத்தை முதலீடு செய்துள்ளார்.

பின்னர் அவர்கள் முறைகேடாக தன்னிடம் இருந்து பணம் பெற்றதை அறிந்து கொண்ட முருகன் இது குறித்து திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். ஆன்லைன் வர்த்தகம் மூலம் மோசடி செய்த ரூ.1.20 லட்சத்தை மீட்டனர். இதை யடுத்து அந்த பணத்தை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்கினார்.

Tags:    

Similar News