உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கும் பணி நடைபெற்றது.

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான நிலம் மீட்பு

Published On 2023-09-23 09:00 GMT   |   Update On 2023-09-23 09:00 GMT
  • 35 ஏக்கர் நிலம் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தனியாரிடமிருந்து வந்தது.
  • 6.5 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து கையகப்படுத்தி உள்ளனர்.

சீர்காழி:

கொள்ளிடம் ஒன்றியம் கோபாலசமுத்திரம், தைக்கா ல் பகுதியில் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான அன்னச்ச த்திரத்துக்கான 35 ஏக்கர் நிலம் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தனியாரிடமிருந்து வந்தது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து நிலத்தை மீட்கும் பணி நடைபெற்றது.

இதனை அடுத்து கொள்ளிடம் ஒன்றிய பெரு ந்தலைவர் ஜெயபிரகாஷ், ஒன்றிய குழு துணை தலைவர் பானுசேகர், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், ஒன்றிய ஆணையர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, வருவாய் ஆய்வாளர் தமிழ்வேந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு பொக்லைன் எந்திரத்துடன் ஆக்கிரமி ப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு ஆக்கிரமிப்பை அகற்றினர்.

மேலும் நில அளவையர்களை கொண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான இடங்களை அளவிடும் பணி மற்றும் பொக்லைன் எந்திரங்களைக் கொண்டு நிலத்தை கையகப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போது அதிகாரிகள் முதற்கட்டமாக 6.5 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து கையகப்படுத்தி யுள்ளனர். மீதமுள்ள நிலங்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News