உள்ளூர் செய்திகள்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணனிடம் ஆர்.பி. அரசு நிறுவனம் சார்பில் ரூ.2 லட்சத்திற்கான வரை வோலை வழங்கப்பட்டது. 

நலத்திட்டங்களுக்காக ஆர்.பி. அரசு நிறுவனம் நிதியுதவி

Published On 2022-08-11 10:52 GMT   |   Update On 2022-08-11 10:52 GMT
  • ஆர்.பி அரசு என்ற நிறுவனம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் நலத்திட்டங்களை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி வருகின்றனர்.
  • இலங்கை வாழ் தமிழர் நலனுக்காக ரூ.1 லட்சம், சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்காக ரூ.1 லட்சம் என்று, 2 லட்சத்திற்கான வரையோலையை ஆர்பி அரசு நிறுவனர் ஆர்.விஜயராகவன் வழங்கினார்.

நீடாமங்கலம்:

வலங்கைமானில் உள்ள ஆர்.பி அரசு என்ற நிறுவனம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் நலத்திட்டங்களை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் ஆர்.பி அரசு நிறுவனத்தின் உரக்கடை 16-வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணனிடம் இலங்கை வாழ் தமிழர் நலனுக்காக ரூ.1 லட்சம், சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்காக ரூ.1 லட்சம் என்று, 2 லட்சத்திற்கான வரையோலையை ஆர்பி அரசு நிறுவனர் ஆர்.விஜயராகவன் வழங்கினார்.

Tags:    

Similar News