உள்ளூர் செய்திகள்

பெண்ணுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய ராசிபுரம் வாலிபர் கைது

Published On 2023-03-10 15:16 IST   |   Update On 2023-03-10 15:16:00 IST
  • சேலம் நெடுஞ்சாலை நகர் நர்மதா தெருவை சேர்ந்த 41 வயது திருமணமான பெண்மணிக்கு, கடந்த 2 1/2 ஆண்டுகளாக போன் மூலம் தகாத முறையில் பேசியும், ஆபாச குறுந்தகல்களையும் வாலிபர் ஒருவர் தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார்.
  • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வடகம் பகுதியை சேர்ந்தவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சேலம்:

சேலம் நெடுஞ்சாலை நகர் நர்மதா தெருவை சேர்ந்த 41 வயது திருமணமான பெண்மணிக்கு, கடந்த 2 1/2 ஆண்டுகளாக போன் மூலம் தகாத முறையில் பேசியும், ஆபாச குறுந்தகல்களையும் வாலிபர் ஒருவர் தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார்.

பலமுறை கண்டித்தும், வாலிபர் தொடர்ந்து போன் மூலம் தொல்லை கொடுத்ததால், இதுகுறித்து அந்த பெண் சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்த நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வடகம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் பூபதி (வயது 36) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News