உள்ளூர் செய்திகள்

விழாவில் பக்தர் ஒருவர் தீமிதித்த காட்சி.

ராசிபுரம் அங்காளம்மன் கோவில் திருவிழா

Published On 2023-02-21 07:46 GMT   |   Update On 2023-02-21 07:46 GMT
  • ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது.
  • இக்கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது. சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவம், பூப்பந்தல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது. சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவம், பூப்பந்தல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து கங்கணம் கட்டி சக்தி கரகம் எடுத்து

தீக்குண்டம் பற்ற வைக்கப்பட்டது. பக்தர்கள் பூங்கரகம், தீச்சட்டி ஏந்திய வாறு நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் இருந்து பம்பை, மேள தாளங்களுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வல மாக வந்து தீ மிதித்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து அம்மனுக்கு நவரத்தினம் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாரா தனை காட்டப்பட்டது. விழாவில் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News