உள்ளூர் செய்திகள்

லாரி மீது ைபக் மோதி வாலிபர் பலி

Published On 2022-08-28 14:26 IST   |   Update On 2022-08-28 14:26:00 IST
  • உறவினர் வீட்டிற்கு சென்ற போது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த கருங்கால் மேடு கிராமத்தை சேர்ந்தவர். யுவராஜ் (வயது 36). இவர் நேற்று தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக தனது பைக்கில் காவேரிப் பாக்கத்தில் இருந்து பாணாவரம் வழியாக சென்று கொண்டிருந்தார்.

கட்டளை கிராமம் அருகே ஏரிக்கரை சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காயமடைந்த யுவராஜ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் ஆகியோர் யுவராஜ் உடலை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து யுவராஜ் தம்பி குமார் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News