உள்ளூர் செய்திகள்

பைக் மீது பஸ் மோதி வாலிபர் பலி

Published On 2023-08-14 14:00 IST   |   Update On 2023-08-14 14:00:00 IST
  • போலீசார் விசாரணை
  • தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்

ஆற்காடு:

ராணிப்பேட்டை பஜார் தெருவை சேர்ந்தவர் உக்கம் சந்த். ஆற்காடு அடுத்த காவ னூரில் நகை அடகுக் கடை நடத்தி வருகிறார்.

இவரது மகன் பியூஸ் (வயது 22). இவர் தனது தந்தைக்கு துணையாக கடையில் இருந்து வந்துள் ளார். இந்த நிலையில் நேற்று மதியம் பியூஸ் காவனூரில் இருந்து ராணிப்பேட்டைக்கு பைக்கில் சென்றார்.

ஆற்காடு அண்ணா சாலை யில் வந்தபோது பின்னால் வந்த தனியார் பஸ் பியூஸ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழேவிழுந்த அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவம னைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News