உள்ளூர் செய்திகள்

விவசாயி கொலையில் வாலிபர் கைது

Published On 2022-12-09 09:56 GMT   |   Update On 2022-12-09 09:56 GMT
  • ரெட்டை குளம் பகுதியில் பதுங்கி இருந்தவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்
  • ஜெயிலில் அடைப்பு

அரக்கோணம்:

அரக்கோணத்தை அடுத்த நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (வயது 50). விவசாயி. இவருக்கும் இவரது சகோ தரி மகன் அஜித் (22) என் பவருக்கும் நிலம் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக ஜோதி மீது அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜோதியை, அஜித் வெட்டி கொலைசெய்து விட்டு தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.

இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்தை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை ரெட்டை குளம் பகுதியில் பதுங்கி இருந்த அஜித்தை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News