உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

அரக்கோணத்தில் வாலிபர் தற்கொலை

Published On 2022-06-16 10:00 GMT   |   Update On 2022-06-16 10:00 GMT
  • மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
  • கதவை பூட்டிக்கொண்டு தூக்கில் தொங்கினார்.

அரக்கோணம்:

அரக்கோணம் அடுத்த மாறன் கண்டிகையை சேர்ந்தவர் திருமூர்த்தி(வயது 27) இவரது மனைவி சங்கீதா திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

திருமாறன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் வேலைக்கு செல்லாமல் மனைவியுடன் தகராறு செய்து வந்தார். நேற்று இரவு சங்கீதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திருமூர்த்தி வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரக்கோணத்தில் தொடரும் தற்கொலையால் இச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News