உள்ளூர் செய்திகள்
பெண்ணிடம் 5 பவுன் தாலி செயின் பறிப்பு
- பைக்கில் வந்து துணிகரம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் கணேஷ் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் வேலு. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உமாதேவி (வயது 35).
இவர் நேற்று இரவு கணேஷ் நகர் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள கடையில் மாவு அரைத்துக் கொண்டு, வீட் டிற்கு நடந்து சென்றார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் உமா தேவியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு மோட்டர் சைக்கிளில் தப்பிசென்று விட்டான்.
இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.