உள்ளூர் செய்திகள்

மரத்தில் இருந்து தவறிவிழுந்த பெண் சாவு

Published On 2022-12-29 15:16 IST   |   Update On 2022-12-29 15:16:00 IST
  • ஆடுகளுக்கு தழை வெட்டியபோது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

கலவை:

கலவையை அடுத்தகுப்பிடிசாத்தம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 65). இவரது மனைவி குப்பம்மாள் (55). இவர் கடந்த 12-ந் தேதி காலையில் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுள்ளார். அப்போது வேப்பமரத்தில் ஏறி தழை வெட்டி ஆடுகளுக்கு போடும்போது. தவறி கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அருகே இருந்தவர்கள் அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவம னையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து வாழைப்பந்தல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News