மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
- அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏவின் 45-வது பிறந்த நாளை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுச்சூழல் அணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி இணைந்து ராணிப்பேட்டை நகரத்தில் உள்ள விசுவாஸ் மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி தலைமை தாங்கினார்.விஸ்வாஸ் பள்ளி தலைவர் கமலா காந்தி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உணவு அளித்து அவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார்.நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் மற்றும் சுற்றுச்சூழல் அணி நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.