உள்ளூர் செய்திகள்

கைதானவரையும் பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகளையும் படத்தில் காணலாம்.

ஆற்காட்டில் பைக்குகள் திருடிய வேலூர் வாலிபர் கைது

Published On 2022-10-31 10:14 GMT   |   Update On 2022-10-31 10:14 GMT
  • 10 வாகனங்கள் பறிமுதல்
  • போலீசார் விசாரணை

ஆற்காடு:

ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர்கள் மகாராஜன், உதயசூ ரியன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று ஆற்காட்டில் உள்ள செய்யார் சாலையில் வாகனத் தணிக் கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாகமோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் வேலூர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த சூர்யா (வயது 21) என்பதும், ஆற்காடு பகுதியில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடி பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து சூர்யாவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 10 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News