உள்ளூர் செய்திகள்
லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
- வாலாஜா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை முத்துக் கடை அருகே உள்ள வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி ( வயது 36 ). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜீவ்காந்தி பிணத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் எதனால் தூக்குப் போட்டுக் கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.