உள்ளூர் செய்திகள்

காவேரிப்பாக்கம் அருகே வழிப்பறி கும்பல் அட்டகாசம்

Published On 2023-07-26 13:47 IST   |   Update On 2023-07-26 13:47:00 IST
  • வாகன ஓட்டிகள் பீதி
  • இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் இருந்து பெரும்புலி பாக்கம் செல்லும் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இரவு நேரங்களில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறும் இடங்களில் மின்விளக்கு வெளிச்சம் இல்லாமல் இருட்டாக உள்ளது.

அப்பகுதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் பைக்கில் செல்பவர்கள் மெதுவாக செல்கின்றனர்.

இருட்டில் பதுங்கி இருக்கும் மர்ம நபர்கள் பைக்கில் தனியாக செல்பவர்களை பைக்கில் பின் தொடர்ந்து சென்று வழிமறிக்கின்றனர்.

அவர்கள் கத்தியை காட்டி நகை, பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி செல்கின்றனர். தங்களது உடைமைகளை பறிப்கொடுத்தவர்கள் அவளூர் போலீசில் புகார் செய்தாலும் வழக்கு பதிவு செய்யாமல் புகார் கொடுக்க அனுப்புவதாக கூறப்படுகிறது.

வழிப்பறி சம்பவத்தில் ஏராளமானவர்கள் தங்களது உடைமைகளை வழிப்பறி கும்பலிடம் இழந்து உள்ளனர்.

இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

எனவே மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் போலீசாருக்கு உரிய அறிவுரை வழங்கி வழிப்பறி கும்பல்களிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும்.

போலீசார் வழிப்பறி நடைபெறும் இடங்களில் இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிர படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News