கல்குவாரியில் டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி
- செங்குத்தான மலை பாதையில் ஏறிய போது விபரீதம்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
வாலாஜா அடுத்த அனந்தலை மலையில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரிகள் உள்ளது. இந்த கல்குவாரியில் பாறைகளை துளையிடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு தனியார் கல்குவாரி ஒன்றில் வடகடப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த குமார் (வயது 27) என்பவர் கல்குவாரிக்கு பாறைகளை துளையிடும் கம்ப்ரஸர் டிராக்டரை ஓட்டி சென்றார்.
டிராக்டர் செங்குத்தான மலை பாதையில் செல்லும்போது திடீரென டிராக்டர் பழுதடைந்துது. இதனால் டிரைவர் கட்டுபாட்டை இழந்து பின்னோக்கியே வந்து தடம்புரண்டு டிராக்டர் கவிழ்ந்தது.
இதில் டிராக்டரின் கீழ் சிக்கிகொண்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக குமாரின் மனைவி ரஞ்சிதா வாலாஜா போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, குமார் உடலை பிரேத பரிசோதனை க்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.