உள்ளூர் செய்திகள்

வாலிபர் தூக்கிட்டு சாவு

Published On 2023-01-25 15:08 IST   |   Update On 2023-01-25 15:09:00 IST
  • மனஉளைச்சலில் விபரீதம்
  • போலீசார் விசாரணை

காவேரிப்பாக்கம்:

காவேரிப்பாக்கம் அல்லி முத்து தெருவை சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் பாலாஜி (வயது 28). திருமண மாகாத இவர் கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News