உள்ளூர் செய்திகள்
- பைக்கில் வந்தவரை மறித்து கொடூரம்
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
சோளிங்கரை அடுத்த வீராணத்தூரை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 23). இவர், சோளிங்கர் பஜார் பிள்ளையார் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது கொடைக்கல் மோட்டூரை சேர்ந்த வெற்றிவேல் (27) என்பவர் இருசக்கர வாகனத்தை நிறுத்தினார் .
பின்னர் அவர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் ஹரிஹரனை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சோளிங்கர் போலீஸ் இன்ஸ் பெக்டர் முருகானந்தம், சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெற்றிவேலை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.