உள்ளூர் செய்திகள்

டிராக்டரை திருடி டீசல் இல்லாததால் ரோட்டில் விட்டு சென்ற கும்பல்

Published On 2022-06-23 10:27 GMT   |   Update On 2022-06-23 10:27 GMT
  • போலீஸ் நிலையத்தில் புகார்
  • டிராக்டரை சோதனை செய்தனர்

நெமிலி :

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த அவளூர் கிராமத்தில் ஆதி காளி அம்மன் கோயில் அருகே பல மணி நேரமாக கேட்பாரற்று டிராக்டர் ஒன்று நின்று கொண்டிருந்தது.

அப்போது அந்த வழியாக சென்ற அவலூர் தனிப்பிரிவு போலீசார் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த டிராக்டரை சோதனை செய்தனர்.

அந்த டிராக்டர் திருவள்ளூர் மாவட்டம் பகுதியை சேர்ந்த கன்னியப்பன் (வயது 59) விவசாயி. என்பவருடைய டிராக்டர் தெரியவந்தது.

அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது டிராக்டர் திருடு போய்விட்டதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் டிராக்டரை ஓட்டி சென்றவர்கள் டீசல் இல்லாததால் ரோட்டில் விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்த வாகனத்தில் உள்ள பதிவு எண்ணை கொண்டு உரிமையாளரை அழைத்து அவரிடம் இந்த டிராக்டர் ஒப்படைக்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு தனிப்பிரிவு போலீசார் சீனிவாசனை அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி மற்றும் ராணிப்பேட்டை எஸ்பி தீபா சத்யன் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News