உள்ளூர் செய்திகள்
திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை
- 7 வருடங்களாக பெண் பார்த்து வந்தனர்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை, சிப்காட் அடுத்த புளியந்தாங்கல் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத் (வயது 32). இவர் நெல்லிக்குப்பம் சிப்காட் பேஸ்-3 உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 7 வருடங்களாக வினோத்தின் திருமணத்திற்கு பெண் பார்த்து வந்தனர். இதில் ஜாதகம் எதுவும் சரியாக அமையாததால் இதுவரை திருமணம் நடைபெறவில்லை என்ற விரக்தியில் இருந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று வினோத் வீட்டில் தூக்கில் தொங்கினார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் வினோத்தை மீட்டு ராணிப்பேட்டை தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.