உள்ளூர் செய்திகள்

பஸ்சில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள்

Published On 2022-09-01 15:06 IST   |   Update On 2022-09-01 15:06:00 IST
  • டிரைவர், கண்டக்டர்கள் அறிவுரை வழங்க வேண்டும்
  • கூடுதல் பஸ்கள் இயக்க வலியுறுத்தல்

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் தனியார் பஸ்சில் பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் படியில் தொங்கியபடி செல்கின்றனர்.

இதனால் எந்த நேரத்திலும் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த நேரத்தில் மாணவர்களின் நலனை எதிர் காலத்தை கருத்தில் கொண்டு படியில் பயணம் செய்வதை தவிர்க்க அறிவுரை வழங்க வேண்டும்.

மேலும் இந்த வழித்தடத்தில் கூடுதலாக அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News