வாணாபாடி ஊராட்சிக்கு நவ்லாக் கிணற்றிலிருந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
- கலெக்டர் அலுவலகத்தில் மனு
- போர் போட்டால் தண்ணீர் நிறம் மாறி வருவதாக புகார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் வாணாபாடி ஊராட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர், முன்னாள் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் வளர்மதியிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர்.
அந்த மனுவில் வாணாபாடி ஊராட்சியில் சுமார் 15 ஆயிரம் மக்கள் வசித்து வருகிறோம். கடந்த 2000-ம் ஆண்டு வாணாபாடி, முகுந்தராயபுரம், செட்டிதாங்கல், நவ்லாக், மாந்தாங்கல் ஆகிய பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது.
எங்கள் கிராமத்தின் அருகே பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளதால் போர் போட்டால் தண்ணீர் நிறம் மாறி வருகிறது. இதனால் பாதிப்புகள் ஏற்படுகிறது.
குடிநீர் சப்ளையும் போதுமானதாக இல்லை. எனவே நவ்லாக் பகுதி கிணற்றிலிருந்து எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட வாணாபாடி, உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.