உள்ளூர் செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை
- பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கினர்
- உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தினர் ஏற்பாடு
அரக்கோணம்:
அரக்கோணம் சுவால்பேட்டையில் அமைந்துள்ள ராமர் கோவிலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நலன் பெற உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் சிறப்பு பூஜை நடத்தினர்.
வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த துணைத் தலைவர் கதிரவன் தலைமையில் தலைவர் டீட்டா சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
முதல்-அமைச்சர் உடல்நலம் பெற்று பூரண குணமடைய வேண்டி சிறப்பு பூஜை செய்தனர்.
பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் உதயநிதி ரசிகர் நற்பணி மன்றத்தினர் பிரசாதம் வழங்கினர்.
இதில் துணைச் செயலாளர் வினோத், தெய்வா, ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஸ்ரீராம், அருண், மதன், விக்கி, சையத், ஏமந்த் மற்றும் பலர் பங்கேற்றனர்.