உள்ளூர் செய்திகள்

மேல்விஷாரத்தில் நகர சபை கூட்டம் நடந்த காட்சி

மேல்விஷாரத்தில் சூரிய மின்விளக்குகள் அமைக்க வேண்டும்

Published On 2023-03-01 15:09 IST   |   Update On 2023-03-01 15:09:00 IST
  • நகர சபை கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

மேல்விஷாரம்:

மேல்விஷாரத்தில் சூரிய மின்விளக்குகள்அமைக்க வேண்டும் என நகர்மன்றஉறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூட்டத்துக்கு, நகர்மன்றத் தலைவர் எஸ் டி முகமது அமீன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் குல்சார் அஹமது, ஆணையாளர் பரந்தாமன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், நகர மன்ற உறுப்பினர்கள்ஜமுனா ராணிவிஜி, உதயகுமார், கோபிநாத், ஜியாவூதின் உஷா, ஜெயந்தி ஆகியோர் கீழ்விஷாரம்ப குதியில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க பாலாற்றில் தனியாக நீரேற்று நிலையம் அமைக்க வேண்டும் பிரான்சாமேடு பகுதியில் கூடுதல் மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டி அமைக்க வேண்டும் கால்வாய் தூர்வார வேண்டும், சூரிய ஒளி வேண்டும் மின்விளக்குகள் அமைக்க வேண்டும என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News