உள்ளூர் செய்திகள்

ஸ்ரீ கார்த்த வீர்யாஜுனர் ஜெயந்திவிழா

Published On 2023-11-18 08:01 GMT   |   Update On 2023-11-18 08:01 GMT
  • நாளை நடக்கிறது
  • பிரசாதம் வழங்கப்பட உள்ளது

ராணிப்பேட்டை:

வாலாஜா அடுத்த கீழ் புதுப்பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மட்டுமே பச்சைக் கல்லினால் ஆன 4 அடி உயரத்தில் 16 திருக்கரங்களுடன் சகஸ்ராஜ்ஜுனர் என்னும் கார்த்தவீர்யாஜுனருக்கு தனிசன்னதி அமைந்துள்ளது சிறப்பு ஆகும். சிறப்பு வாய்ந்த கார்த்தவீர்யாஜுனருக்கு நாளை காலை ஜெயந்தி விழா நடக்கிறது.

விழாவை முன்னிட்டு உலக நன்மைக்காகவும்,இழந்த சொத்துகள்,பொருளையும் மீட்கவும் , நீண்ட ஆயுள் வேண்டியும் கார்த்தவீர்யாஜுனர்

ஹோமமும், பால், தயிர், கரும்புச்சாரு போன்ற 16 விதமான பொருள்களை கொண்டு நவ கலச திருமஞ்சனம் நடைபெறுகிறது. பின்னர் மலர்களை கொண்டு புஷ்பாஞ்சலியும், தீப சேவையும் நடைபெற்று கார்த்தவீர்யார்ஜுன ரக்ஷையுடன் பிரசாதம் வழங்கப்பட உள்ளது.

நவ கலச திருமஞ்சனமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பீடாதிபதி டாக்டர்.முரளிதர சுவாமிகள் தலைமையில் தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.

Tags:    

Similar News