உள்ளூர் செய்திகள்

மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

Published On 2023-06-04 08:09 GMT   |   Update On 2023-06-04 08:09 GMT
  • அதிகாரிகளை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர்
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

அரக்கோணம்:

அரக்கோணம் அடுத்த மின்னல் நரசிங்கபுரம் பகுதி யில் மண் கடத்தப்படுவதாக அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரத்திற்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அவரது தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர் கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது அந்த வழியாக டிராக்டரில் மண் ஏற்றி வந்த வர்கள், அதிகாரிகளை கண்ட தும் தப்பி ஓடிவிட்டனர்.

இதனையடுத்து தாசில்தார் சண் முகசுந்தரம் டிராக்டரை பறி முதல் செய்து அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத் தில் ஒப்படைத்தார்.

இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News