உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

Published On 2022-09-30 09:37 GMT   |   Update On 2022-09-30 09:37 GMT
  • 9ம் வகுப்பு படித்து வந்தார்
  • போலீசார் விசாரணை

வாலாஜா:

வாலாஜாப்பேட்டை அருகே திருத்தணி தெற்கு வீதியில் வசித்து வருபவர் கன்னியப்பன். அதே பகுதியில் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது மகள் வரலட்சுமி (வயது 14) வாலாஜாபேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று நீண்ட நேரம் தூங்கியதால் வரலட்சுமி பள்ளிக்கு விடுமுறை எடுத்ததாக கூறப்படுகிறது.இதனால் கோபம் அடைந்த பெற்றோர் வரலட்சுமியை திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மணமுடைந்த வரலட்சுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட பெற்றோர் உடனடியாக வாலாஜா பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வரலட்சுமி இறந்தது தெரியவந்தது.

மேலும் சம்பவ இடத்துக்கு வந்த வாலாஜாபேட்டை போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வாலாஜாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News