உள்ளூர் செய்திகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

Published On 2023-09-13 15:07 IST   |   Update On 2023-09-13 15:07:00 IST
  • நெடுஞ்சாலை துறை சார்பில் நடந்தது
  • விபத்துகளில் 7200 பேர் இறந்துள்ளனர்

அரக்கோணம்:

அரக்கோணம் தனியார் பள்ளி வளாகத்தில் தமிழக நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சாலை பாதுகாப்பு திட்ட விழுப்புரம் கோட்ட பொறியாளர் ஸ்ரீகாந்த் பேசுகையில்;

கடந்த 8 மாதங்களில் சாலை விபத்துகளில் 7200 பேர் இறந்துள்ளனர். ஆகையால் வாகனங்களை சாலை விதிகளை கடைப்பிடித்து இயக்க வேண்டும்.

இதில் அரக்கோணம் போக்கு வரத்துத் துறை மோட்டார் வாகன ஆய்வாளர் செங்கோட்டு வேல், ராணிப்பே ட்டை கோட்ட பொறியாளர் செல்வகுமார், அரக்கோணம் உதவிக் கோட்டப் பொறியாளர் உமா செல்வன், வாலாஜா உதவிக் கோட்ட பொறியாளர் பாலாஜிசிங், ஆற்காடு உதவிக் கோட்ட பொறியாளர் சரவணன், அரக்கோணம் உதவிப் பொறியாளர் லிங்கேஷ்வ ரன், சாலை ஆய்வாளர்கள் ஆறுமுகம், சபிதா, ரேணுகா மற்றும் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News