உள்ளூர் செய்திகள்

கிணற்றில் பெண் பிணம் மீட்பு

Published On 2022-07-20 09:22 GMT   |   Update On 2022-07-20 09:22 GMT
  • மாயமானவர் வீடு திரும்பவில்லை
  • போலீசார் விசாரணை

ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த கணியனூர் பகுதியைச் சேர்ந்தவர் பச்சையம்மாள் (வயது 47) இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது .

இந்நிலை யில் கடந்த 17 - ம் தேதி வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் பச்சையம்மாள் பிணமாக மிதப்பதாக அப்பகுதி மக்கள் திமிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பச்சையம்மாள் சாவு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News