- வருகிற 12,26-ந் தேதிகளில் நடக்கிறது
- பணி நியமனம் பெறுபவர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது
ராணிப்பேட்டை:
தமிழக அரசு, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலை வாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
அதனடிப்படையில் இம்மாதத்தில் வரும் 12.8.2022 மற்றும் 26/8/2022 ஆகிய நாட்களில் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.
இதில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ டிப்ளமோ மற்றும் பிஇ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.
கல்விதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 12-ம் தேதி 26-ம் தேதி ஆகிய வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறும் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மேலும் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.