உள்ளூர் செய்திகள்

பஸ்சில் இருந்து தவறி விழுந்து பிளஸ்-1 மாணவர் படுகாயம்

Published On 2023-02-23 14:47 IST   |   Update On 2023-02-23 14:47:00 IST
  • படிக்கட்டில் தொங்கியபடி சென்றபோது விபரீதம்
  • போலீசார் விசாரணை

ஆற்காடு:

திமிரியை அடுத்த மோசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கம லம். பஸ் டிரைவர். இவரது மகன் தினகரன் (வயது 17), ஆற் காட்டில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பிளஸ்- 1 படித்து வருகிறார்.

நேற்று காலை ஆரணியில் இருந்து விளாப்பாக்கம் வழியாக ஆற்காடு நோக்கி வரும் அரசு பஸ்சில் படிக்கட்டில் தொங் கியபடி பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார்.

விளாப்பாக்கத்தை அடுத்த உப்புப்பேட்டை அருகே வரும் போது பஸ்சிலிருந்து தவறி கீழே விழுந்த அவர் மீது பஸ்சின் சக்கரம் ஏறியதில் காலில் உள்ள கட்டை விரல் நசுங்கி உள்ளது.

உடனே பஸ் நிறுத்தப்பட்டு தினகரனை பயணிகள் மீட்டனர். உடனடியாக தினகரனை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திமிரி போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News