உள்ளூர் செய்திகள்

வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்த பஞ்சாயத்து தலைவர்கள்

Published On 2022-08-05 09:44 GMT   |   Update On 2022-08-05 09:44 GMT
  • நெமிலி ஒன்றியத்தில் 47 பஞ்சாயத்து உள்ளது
  • உரிமையை பறிக்க கூடாது என அறிவுறுத்தல்

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பஞ்சாயத்து யூனியன் குட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நெமிலி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மனு ஒன்றை அளித்தனர்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நெமிலி ஒன்றியத்தில் 47 பஞ்சாயத்து உள்ளது. அனைத்து கட்சி தலைவர்களும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் செயல்படுத்தப்படும் திட்டங்களை அவர்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் எனவும் மேலும் தலைவர்கள் உரிமையை எக்காரணம் கொண்டும் பறிக்கக் கூடாது எனவும் அவர்கள் பஞ்சாயத்து வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அவர்களுக்கு முழுமையாக தெரியும்.

எனவே பஞ்சாயத்து தலைவர்களின் உரிமையை பறிக்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News