உள்ளூர் செய்திகள்

பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-05-24 09:36 GMT   |   Update On 2023-05-24 09:36 GMT
  • கணவன் மனைவி கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்தனர்
  • போலீசார் விசாரணை

சோளிங்கர்:

சோளிங்கர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 50), பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.

அதைத்தொடர்ந்து பெருமாள் தனது அண்ணன் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று பெருமாள் குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சோளிங்கர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News