உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மகளிர் திட்டத்தின் மூலம் தொழில் முனைவோர் கடன் கடன் வழங்கும் திட்டத்தில் 65 மகளிருக்கு ரூ.16.25 லட்சம் கடன் உதவிக்கான ஆணையை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிருக்கு ரூ.16.25 லட்சம் கடன் உதவி ஆணை

Published On 2022-07-19 15:21 IST   |   Update On 2022-07-19 15:23:00 IST
  • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்
  • 280 மனுக்கள் பெறப்பட்டது

ராணிப்பேட்டை :

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்றார்.

கூட்டத்தில் வருவாய்த்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மை துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சி துறை, கூட்டுறவு கடன் உதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத் துறை சார்பான குறைகள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, மருத்துவத்துறை, கிராம பொது பிரச்சனைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநல மனுக்கள் என 280 மனுக்கள் பெறப்பட்டது.

அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கப்பட்டு உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை மனுதாரர்களுக்கு உடனடியாக தெரிவித்திட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.கூட்டத்தில் மகளிர் திட்டத்தின் மூலம் தொழில் முனைவோர் கடன் வழங்கும் திட்டத்தில் 65 பெண்களுக்கு ரூ.16 லட்சத்து 25 ஆயிரம் கடன் உதவிக்கான ஆணையை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், மகளிர் திட்ட இயக்குனர் நானிலதாசன், துணை ஆட்சியர்கள் சேகர், தாரகேஸ்வரி, உதவி திட்ட அலுவலர்கள் சாகுல் ஹமீத், சுபாஷ் சந்திரன், பெர்லீனா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News