உள்ளூர் செய்திகள்

அதிகாரிகள் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு

Published On 2023-07-14 15:13 IST   |   Update On 2023-07-14 15:13:00 IST
  • பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார்
  • அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் நடைபெற்ற வரும் திட்டப்பணிகள் குறித்து பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண் குராலா நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது வளம் மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை திட்ட செய்லபாடுகளை பார்வையிட்டார். தொடர்ந்து 2022-2023-ம் ஆண்டு கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மேடை கட்டும் பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார். இதில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் (பொறுப்பு) அம்சா, காவேரிப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் , உதவி செயற்பொறியாளர் , இளநிலை பொறியாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News