உள்ளூர் செய்திகள்

ரெயிலில் இருந்து தவறி விழுந்து வடமாநில வாலிபர் சாவு

Published On 2023-02-21 15:06 IST   |   Update On 2023-02-21 15:06:00 IST
  • அரக்கோணம் அருகே பரிதாபம்
  • போலீசார் விசாரணை

அரக்கோணம்:

பெங்களூருவில் இருந்து பீகார் மாநிலம் தானாபூர் வரை செல்லும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் 2.30 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையம் வந்தடைந்தது.

பின்னர் சென்னை நோக்கி ரெயில் புறப்பட்டு சென்றபோது எதிர்பாராத விதமாக ரெயிலில் பயணம் செய்த பீகார் மாநிலம் சம்சத்பூர் பகுதியை சேர்ந்த மோன்தோஷ் சதா (வயது 21) என்பவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானர்.

இதனையடுத்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News