உள்ளூர் செய்திகள்

ரோடு ரோலர் மோதி வடமாநில தொழிலாளி பலி

Published On 2023-08-08 15:02 IST   |   Update On 2023-08-08 15:02:00 IST
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
  • பின்னோக்கி வந்து வாலிபர் மீது ஏறியது

காவேரிப்பாக்கம்:

காவேரிப்பாக்கம் அடுத்த பாணாவரம் பகுதியில் சென்னை- பெங்களூர் அதிவிரைவு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளில் வட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான கூலி தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் விரைவு சாலை அமைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதில் ரோடு ரோலர் மெக்கானிக்காக பணியாற்றி வந்த மத்தியபிரதேச மாநிலம், மொரனா மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித் (வயது 34). ரோடு ரோலர்களுக்கு ஆயில் கிரீஸ் அடிக்கும் பணிகளை மேற்கொண்டார்.

அப்போது எதிர்பாராத விதமாக ரோடு ரோலர் ஒன்று பின்னோக்கி வந்து ரஞ்சித் மீது ஏறியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில் அங்கு அவர் சிகிக்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார். இதுகுறித்து பாணாவரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News