உள்ளூர் செய்திகள்

நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா

Published On 2023-10-06 14:35 IST   |   Update On 2023-10-06 14:35:00 IST
  • மாணவிகளுக்கு கேடயங்களை வழங்கி பாராட்டு
  • பனப்பாக்கம் அரசு பள்ளியில் நடந்தது

காவேரிப்பாக்கம்:-

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் ஒரு வாரம் நடைபெற்றது. இதன் நிறைவு விழா  நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷர்மிளா தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன் கலந்துகொண்டு முகாமில் சேவை செய்த மாணவிகளுக்கு கேடயங்களை வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் மயூரநாதன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ரேகா, முன்னாள் தலைமை ஆசிரியை இளவரசி, நெமிலி முதல்நிலை காவலர் தனசேகர், உதவி தலைமை ஆசிரியர்

செந்தில்குமார், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News