உள்ளூர் செய்திகள்
பஸ் சக்கரத்தில் சிக்கி மேஸ்திரி பலி
- தடுமாறி விழுந்த பரிதாபம்
- போலீசார் விசாரணை
வாலாஜா:
வாலாஜாவை அடுத்த வள்ளுவம்பாக்கம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் சுபாஷ் (வயது 31). கட்டிட மேஸ்திரி.
இவர் நேற்று மாலை வாலாஜா பஸ் நிலையத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் பைக்கில் வள்ளுவம் பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது வாலாஜாவை நோக்கி தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக சுபாஷ் ஓட்டி வந்த பைக்கில் இருந்து தடுமாறி விழுந்து பஸ் சக்கரத்தில் சிக்கி கொண்டார். பின்னர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வாலாஜா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் சுபாஷ் செய்து உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர், மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.