என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Mestri Bali"
- காந்தி மகான் பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி முனியப்பன் இவருக்கு வளர்மதி என்ற மனைவியும் 7 மாத பெண் குழந்தை உள்ளது.
- மின் கம்பியில் உயர் மின் அழுத்தம் காரணமாக திடீரென அறுந்து விழுந்தது. அப்போது அவ்வழியாக நடந்து சென்று கொண்டிருந்த கட்டிட மேஸ்திரி முனியப்பன் மீது விழுந்தது, இதில் முனியப்பன் தூக்கி வீசப்பட்டார்.
சேலம்:
சேலம் கிச்சிபாளையம் காந்தி மகான் பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி முனியப்பன் இவருக்கு வளர்மதி என்ற மனைவியும் 7 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் காந்தி மகான் தெரு பகுதியில் உள்ள மின் கம்பியில் உயர் மின் அழுத்தம் காரணமாக திடீரென அறுந்து விழுந்தது. அப்போது அவ்வழியாக நடந்து சென்று கொண்டிருந்த கட்டிட மேஸ்திரி முனியப்பன் மீது விழுந்தது, இதில் முனியப்பன் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்தநிலையில் கட்டிடம் மேஸ்திரி முனியப்பன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இன்று உடலை வாங்க மறுத்து திடீரென அரசு மருத்துவமனை வளாகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து உறவினர் கூறும்போது:-
கிச்சிபாளையம் பகுதியில் மின் பாதைகள் சரிவர இல்லை என்றும் அதனை பராமரிக்காமலேயே உள்ளது என்றும் இதனால் கட்டிடம் மேஸ்திரி உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்தனர். மின்சாரத் துறையின் அலட்சிய போக்கினாலே ஒரு உயிர் பறிபோய் விட்டது என்றும் உயிரிழந்த குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிவாரண நிதியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும். தமிழக அரசு வழங்காவிட்டால் உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்தனர்.
மேலும் உயிரிழந்த கட்டிடம் மேஸ்திரியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
- தடுமாறி விழுந்த பரிதாபம்
- போலீசார் விசாரணை
வாலாஜா:
வாலாஜாவை அடுத்த வள்ளுவம்பாக்கம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் சுபாஷ் (வயது 31). கட்டிட மேஸ்திரி.
இவர் நேற்று மாலை வாலாஜா பஸ் நிலையத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் பைக்கில் வள்ளுவம் பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது வாலாஜாவை நோக்கி தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக சுபாஷ் ஓட்டி வந்த பைக்கில் இருந்து தடுமாறி விழுந்து பஸ் சக்கரத்தில் சிக்கி கொண்டார். பின்னர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வாலாஜா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் சுபாஷ் செய்து உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர், மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்