உள்ளூர் செய்திகள்

சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

Published On 2023-06-17 15:34 IST   |   Update On 2023-06-17 15:34:00 IST
  • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் பேரில் நடவடிக்கை
  • ஜெயில் அடைக்க கலெக்டர் உத்தரவு

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், சாராய விற்பனையில் ஈடுபட்ட கொண்டகுப்பம், சத்திரம் புதூரை சேர்ந்த ரமேஷ் (47) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இவரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் வளர்மதி, சாராய விற்பனையில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரமேஷை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News